ஆரையம்பதியில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆரையம்பதி அமரசிங்கம் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது இன்னுமொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிசூட்டை நடாத்திவிட்டுச்சென்றதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிசூட்டில் காங்கேயனோடை பிரதேசத்தினை சேர்ந்த முகமட் கலீல் மஸ்தி என்பவரே காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸாரும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினரும் மேற்கொண்டுவருகின்றனர்.