(லியோன்)
தனியார் கல்வி நிலையம் தொடர்பில்
மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபரினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் இயங்கி வரும் கல்வி நிலைய நிர்வாகம் மற்றும் அதன்
உரிமையாளருக்கு எதிராக மட்டக்களப்பு
மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரினால் சட்ட நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது .
குறித்த கல்வி நிலையத்தில் ஞாயிறு தினங்களில் வகுப்புக்கள்
நடைபெறுவதாக பொதுமக்கள் , சமயத்தலைவர்கள் , சட்டத்தரணிகளினால் செய்யப்பட
முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றனர் .
அண்மையில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மகாநாட்டில் ஞாயிறு தினங்களில்
தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் , இது
குறித்து நீதிமன்றம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஊடாக அறிவுறுத்தல்கள்
விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .