கல்வி நிலையம் மற்றும் அதன் உரிமையாளருக்கு எதிராக பொலிஸ்மா அதிபரினால் சட்ட நடவடிக்கை .

(லியோன்)

தனியார் கல்வி நிலையம் தொடர்பில்  மட்டக்களப்பு பிரதி பொலிஸ்மா அதிபரினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பகுதியில் இயங்கி வரும்  கல்வி நிலைய நிர்வாகம் மற்றும் அதன்  உரிமையாளருக்கு எதிராக  மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரினால் சட்ட நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது .

குறித்த கல்வி நிலையத்தில் ஞாயிறு தினங்களில் வகுப்புக்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் , சமயத்தலைவர்கள் , சட்டத்தரணிகளினால் செய்யப்பட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றனர் .


அண்மையில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மகாநாட்டில் ஞாயிறு தினங்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்கள்  நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன் , இது குறித்து நீதிமன்றம் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஊடாக அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .