(லியோன்)
மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடக்கரை பகுதியில் இருந்து ஆண் ஒருவரின்
சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
,
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி டச்பார் கடக்கரை பகுதியில் இருந்து 50
வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கரை
ஒதுங்கிய நிலையில் இன்று காலை பொலிசாரினால்
மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர் .
சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிசார்
தெரிவிக்கின்றனர் .
சடலமாக மீட்கப்பட்டவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
வைக்கப்பட்டுள்ளதுடன் , குறித்த சடலம் தொடர்பான
விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்