கல்லடி டச்பார் கடக்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

(லியோன்)

மட்டக்களப்பு கல்லடி டச்பார் கடக்கரை பகுதியில் இருந்து  ஆண் ஒருவரின்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்
,

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட   கல்லடி டச்பார் கடக்கரை பகுதியில் இருந்து 50 வயது  மதிக்கத்தக்க  ஆண்  ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் இன்று காலை  பொலிசாரினால்  மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர் . 

சடலமாக மீட்கப்பட்டவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிசார் தெரிவிக்கின்றனர் .


சடலமாக மீட்கப்பட்டவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளதுடன் , குறித்த சடலம்  தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்