தரிசனம் பாடசாலையின் 25 வது ஆண்டு நிறைவு விழா


 (லியோன்)


மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனை தரிசனம் பாடசாலையின் 25 வது ஆண்டு நிறைவு விழா இன்று  கொண்டாடப்பட்டது  



மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனை தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் 25 வது ஆண்டு நிறைவு விழா பாடசாலை நிர்வாக தலைவர் தயானந்தன் தலைமையில் இன்று பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றறது .

ஆரம்ப நிகழ்வாக தரிசனம் பாடசாலை மாணவர்களினால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .

அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது .

இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் , தரிசனம் பாடசாலை தொடர்பான சிறப்புரைகளும் அதிதிகளினால் வாழ்த்துரைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து 25 வது ஆண்டு நிறைவை  கொண்டாடும் வகையில் கேக் வெட்டி மாணவர்களுக்கு பகிரப்பட்டு ஆண்டு நிறைவு கொண்டாப்பட்டது .
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகர பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் , கல்லடி விவேகானந்தா மகளிர் பாடசாலை அதிபர் திருமதி .ஹரிதாஸ் , மாஸ்டர் சிவலிங்கம் ,மண்முனை வடக்கு சமூகசேவை உத்தியோகத்தர் ,ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பாடசாலை நிர்வாக அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள் ,பழைய மாணவர்கள் ,பெற்றோர்கள்  கலந்துகொண்டனர் .