மாவட்ட மட்ட தெரிவு போட்டியில் மண்முனை வடக்கு முதல் இடம்

(லியோன்)

மாவட்ட மட்ட தெரிவு போட்டிக்கான  கராட்டி  போட்டி  மட்டக்களப்பில் நடைபெற்றது 
.

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட தெரிவு போட்டிக்கான  மட்டக்களப்பு மாவட்ட   14 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  பிரதேச செயலக கராட்டி அணிகளுக்கிடையிலான  இறுதி  போட்டிகள் (15) மட்டக்களப்பு இந்து இளைஞர் மண்டபத்தில்  நடைபெற்றன   .

நடைபெற்ற இந்த  இறுதி போட்டியில் கலந்து கொண்ட  14 பிரதேச செயலக கராட்டி அணிகளில்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக அணி முதலாம் இடத்தினையும் , செங்கலடி பிரதேச செயலக அணி இரண்டாம் இடத்தினையும் பெற்று மாவட்ட மட்டத்தில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன.


இந்த போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எஸ் . யோகராஜா , மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எ .சப்ரீன் நசார் ,  போட்டிகளுக்கு  நடுவர்களாக இலங்கை கராட்டி சங்க நடுவர்கள்  மற்றும் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர்கள் , விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டனர்