மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர் தின நிகழ்வு


(லியோன்)

சர்வதேச தாதியர் தின நிகழ்வு (14) ஞாயிற்றுக்கிழமை  மட்டக்களப்பில் நடைபெற்றது , 


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் தாதிய சங்க  தலைவர் புஸ்பராஜா தலைமையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது

ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றலுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது . 

இதனை தொடர்ந்து  தாதிய உத்தியோகத்தர்களின்  கலை நிகழ்வுகளும் , தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தாதிய உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் திருமதி .கே . கணேசலிங்கம் மற்றும் போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் , வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்