(லியோன்)
சர்வதேச தாதியர் தின நிகழ்வு (14) ஞாயிற்றுக்கிழமை
மட்டக்களப்பில் நடைபெற்றது ,
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்
நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் தாதிய சங்க
தலைவர் புஸ்பராஜா தலைமையில் சர்வதேச தாதியர் தின நிகழ்வு மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .
ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றலுடன்
தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது .
இதனை தொடர்ந்து தாதிய உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும் , தரம் ஐந்து புலமைப்பரிசில்
பரீட்சையில் சித்தியடைந்த தாதிய உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்களும்
வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதி
பணிப்பாளர் திருமதி .கே . கணேசலிங்கம் மற்றும் போதனா வைத்தியசாலை வைத்திய
அதிகாரிகள் , வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்