வேலையற்ற பட்டதாரிகளுக்கு விளக்கமறியல்

வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உட்பட நால்வரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த மாதம் கிழக்கு மாகாணசபைக்கு முன்பாக நடைபெற்ற முற்றுகை போராட்டத்தின்போது நீதிமன்ற கட்டளை கிளித்தெறியப்பட்டது தொடர்பில் திருகோணமலை பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நான்கு பேரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவினை திருகோணமலை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி பிறப்பித்தார்.

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் மற்றும் அகில இலங்கை வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தென்னாந்த ஞானரத்ன தேரர் உட்பட நான்கு பேரே இவ்வாறு விளக்கமறியில் வைக்க்பட்டுள்ளனர்.