இளைஞர் தின கொடி விற்பனையில் மண்முனைமேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் தேசிய ரீதியில் ஜந்தாமிடம்

தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை  அலரி மாளிகையில் இடம் பெற்ற பரிசளிப்பு நிகழ்வில்  2016ம் வருடத்தில் இளைஞர் தின கொடி விற்பனையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடத்தினைப் பிடித்து தேசிய ரீதியில் ஜந்தாவது இடத்தினை தட்டிக்கொண்ட மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்க்கு கெளரவிப்பு மற்றும் பணப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.


தேசிய இளைஞர்தினத்தினை முன்னிட்டு இன்று கெளரவ பிரதமர் ரனில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றலுடன் பிரமாண்டமான முறையில் இளைஞர் கெளரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வு அலரிமாளிகையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் போதே தேசிய ரீதியில் ஜந்தாவது இடத்தினை பெற்றுக்கொண்டமைக்காக மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிருவாகிகள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி ஏறந்திக்க வெலியங்கே அவர்களினால் பணப்பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். 

இந்த நிகழ்வில் நாடாளாவிய ரீதியில் சுமார்  இரண்டாயிரம் இளைஞர் யுவதிகள் இளைஞர் சேவை உத்தியோகஷ்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








.