புனர்வாழ்வு திட்டங்களினை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக உத்தியோகத்தர்களினை ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சி நெறி

(லியோன்)

புனர்வாழ்வு திட்டங்களினை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக மாவட்ட மட்ட உத்தியோகத்தர்களினை ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சி நெறி மட்டக்களப்பில் நடைபெற்றது .


வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்படும் புனர்வாழ்வு திட்டங்களினை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக மாவட்ட மட்ட உத்தியோகத்தர்களினை ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சி நெறி மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .நெடுஞ்செழியன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்றது .

அரச அலுவலக அதிகாரிகள் மக்களுக்கான சேவைகளை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு மேற்கொள்கின்ற களவிஜயத்தின் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை எவ்வாறு வெற்றிகொள்வது என்பது தொடர்பாக உத்தியோகத்தர்களினை ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சியுடனான கலந்துரையாடலாக நடைபெற்றது .


இந்த பயிற்சி நெறியில் பயிற்றுவிப்பாளராக புனர்வாழ்வு அதிகார சபை நிறைவேற்று பணிப்பாளர் எம் .எம் . புலேந்திரன் மற்றும் பயிற்சியாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்