(லியோன்)
புனர்வாழ்வு திட்டங்களினை வினைத்திறனாக
மேற்கொள்வதற்காக மாவட்ட மட்ட உத்தியோகத்தர்களினை ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சி
நெறி மட்டக்களப்பில் நடைபெற்றது .
வடக்கு ,கிழக்கு மாகாணங்களில்
நடைமுறைப்படுத்தப்படும் புனர்வாழ்வு திட்டங்களினை வினைத்திறனாக மேற்கொள்வதற்காக மாவட்ட
மட்ட உத்தியோகத்தர்களினை ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சி நெறி மட்டக்களப்பு மாவட்ட
திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .நெடுஞ்செழியன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக
மண்டபத்தில் இன்று நடைபெற்றது .
அரச அலுவலக அதிகாரிகள் மக்களுக்கான சேவைகளை செய்ய வேண்டும் என்ற
நோக்கோடு மேற்கொள்கின்ற களவிஜயத்தின் போது ஏற்படுகின்ற பிரச்சினைகளை எவ்வாறு
வெற்றிகொள்வது என்பது தொடர்பாக உத்தியோகத்தர்களினை
ஊக்கப்படுத்துவதற்கான பயிற்சியுடனான கலந்துரையாடலாக நடைபெற்றது .
இந்த பயிற்சி நெறியில்
பயிற்றுவிப்பாளராக புனர்வாழ்வு அதிகார சபை நிறைவேற்று பணிப்பாளர் எம் .எம் .
புலேந்திரன் மற்றும் பயிற்சியாளர்களாக மட்டக்களப்பு மாவட்ட அரச திணைக்கள
உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்