(லியோன்)
பண்விதத்தன்மை நல்லாட்சி மற்றும் இடைநிலைமாற்றும் நீதி அறிமுகச்
செயலமர்வு இன்று மட்டக்களப்பில்
நடைபெற்றது .
இலங்கை சமாதான பேரவையின்
ஒழுங்கமைப்பில் “ பண்விதத்தன்மை நல்லாட்சி மற்றும் இடைநிலைமாற்றும்
நீதி “ எனும் தலைப்பில் ஒரு நாள் செயலமர்வு தேசிய சமாதான பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர் .மனோகரன்
தலைமையில் மட்டக்களப்பு கல்லடி விடுதியில்
நடைபெற்றது .
ஒரு சமூகத்தில் பல்வேறுபட்ட மக்கள்
வாழ்கின்ற நிலையில் தங்களுக்குரிய கலாசார முறைக்கேற்ப அங்கீகாரங்களை பெற்றுக் கொள்வதற்கும் ஜனநாயகம் சட்டரீதியாக அமைய பெறுகின்ற நிலைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற
செயலமர்வில் கலந்துரையாடப்பட்டது .
இச் செயலமர்வின் பயிற்சியாளராக அரச கொள்கை ,சமூக அபிவிருத்தி
கொள்கை நிறுவன முகாமைத்துவ ஆய்வாளரும் ,ஆலோசகருமான எஸ் .பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய தலைவர்கள்
சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்