பண்விதத்தன்மை நல்லாட்சி மற்றும் இடைநிலைமாற்றும் நீதி அறிமுகச் செயலமர்வு

(லியோன்)

 பண்விதத்தன்மை நல்லாட்சி மற்றும் இடைநிலைமாற்றும் நீதி அறிமுகச் செயலமர்வு  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


இலங்கை சமாதான பேரவையின்  ஒழுங்கமைப்பில் “ பண்விதத்தன்மை நல்லாட்சி மற்றும் இடைநிலைமாற்றும் நீதி  “ எனும் தலைப்பில் ஒரு  நாள் செயலமர்வு  தேசிய சமாதான பேரவையின்  மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஆர் .மனோகரன் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி  விடுதியில் நடைபெற்றது .

ஒரு சமூகத்தில் பல்வேறுபட்ட  மக்கள்  வாழ்கின்ற நிலையில் தங்களுக்குரிய  கலாசார முறைக்கேற்ப அங்கீகாரங்களை  பெற்றுக் கொள்வதற்கும் ஜனநாயகம் சட்டரீதியாக  அமைய பெறுகின்ற  நிலைகள் தொடர்பாக இன்று நடைபெற்ற செயலமர்வில்  கலந்துரையாடப்பட்டது .


இச் செயலமர்வின் பயிற்சியாளராக அரச கொள்கை ,சமூக அபிவிருத்தி கொள்கை  நிறுவன முகாமைத்துவ  ஆய்வாளரும் ,ஆலோசகருமான எஸ் .பாஸ்கரன்  மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பல்சமய தலைவர்கள் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்