முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
இறுதி யுத்ததின்போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து இந்த நிகழ்வு வடக்கில் நடாத்தப்பட்டுவருவதுடன் கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு கல்லடி கடற்கரையில் இன்று மாலை நடைபெற்றது.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.00மணிக்கு கல்லடி கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வுகள் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் தலைமையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்; எஸ்.வியாழேந்திரன்,மாகாணசபை உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நிகழ்வின் தலைவரினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
அரசியல் பேதங்கள் இன்றி தமிழர் என்ற உணர்வுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இறுதி யுத்ததின்போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூர்ந்து இந்த நிகழ்வு வடக்கில் நடாத்தப்பட்டுவருவதுடன் கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்கீழ் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவேந்தல் வாரத்தின் ஐந்தாம் நாள் நிகழ்வு கல்லடி கடற்கரையில் இன்று மாலை நடைபெற்றது.
இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.00மணிக்கு கல்லடி கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வுகள் வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் தலைமையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்; எஸ்.வியாழேந்திரன்,மாகாணசபை உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் நிகழ்வின் தலைவரினால் விசேட உரை நிகழ்த்தப்பட்டது.
அரசியல் பேதங்கள் இன்றி தமிழர் என்ற உணர்வுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் உணர்வாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.