பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் மண்முனைமேற்கு பிரதேசம் முதலாமிடம்.

 பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் மண்முனைமேற்கு பிரதேசம் முதலாமிடம்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 29 வது இளைஞர் விளையாட்டு விழாவின் மட்டக்களப்பு மாவட்ட , மாவட்ட இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் வரிசையில் குழு விளையாட்டுக்கள் கடந்த வாரம் தொடக்கம் நடைபெற்று வருகின்றன .

அந்த வகையில் 29.04.2017 சனிக்கிழமை மாமாங்கம் ஜங்ஸ்ரார் மைதானத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் மண்முனை மேற்கு இளைஞர் கழகம்  முதலாமிடத்தை பெற்றுக் கொண்டது.

இந்த சுற்றுப்போட்டியில் மண்முனை வடக்கு பிரதேச மகளீர் இளைஞர் கழகம் இரண்டாமிடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை பெற்றதன் நிமித்தம் மண்முனை மேற்கு பிரதேச  அணி மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநித்துவப்படுத்தி  மே மாதம் நடைபெறவுள்ள தேசிய மட்ட போட்டியில் பங்குபற்றவுள்ளது.