கயிறுழுத்தல் போட்டியில் கன்னங்குடா கண்ணகி இளைஞர்கழகம் வெற்றி.
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலக மட்டத்தில் பதிவு செய்யப்பட இளைஞர் கழகங்களுக்கிடையிலான கயிறுழுத்தல் போட்டி 28.04.2017வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
இளைஞர் கழகங்களுக்கிடையிலான 29வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் கயிறுழுத்தல் போட்டி மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் ரி. விமல்ராஸ் தலைமையில் வவுணதீவு பரமேஸ்வரா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது .
இப் போட்டியின் இறுதிச்சுற்றில் கண்ணங்குடா கண்ணகி இளைஞர் கழகம் ஈச்சந்தீவு உதய சூரியன் இளைஞர்கழகத்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கி கொண்டது.
இச்சுற்றுப்போட்டியில் வவுணதீவு விபுலாநந்தா இளைஞர் கழகம் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.