கைத்தொழில் சேவைகள் பணியகத்தினால் நடத்தப்பட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கருத்தரங்கு

(லியோன்) 

நாடளாவிய ரீதியில் கிராம மட்ட இளம் தொழில் முயற்சியாளர்களின் தொழில் வாய்ப்பினை விருத்தி செய்யும் நோக்குடன்  கைத்தொழில் சேவைகள் பணியகத்தினால் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கான தேசிய தர சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன


இதன் கீழ் யு என் டி பி நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு  பயிற்சிகள் வழங்கப்பட்டு தெரிவு செய்யப்பட சிறந்த இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு தேசிய தர சான்றிதழ் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன .

இந்த வேலைத்திட்டம்  தொடர்பாக மாவட்டத்தில் அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உதவி திட்ட பணிப்பாளர்களுக்கு தெளிவு படுத்தும் ஒரு நாள் கருத்தரங்கு கைத்தொழில் சேவைகள் பணியகத்தின் இயக்குனர் எஸ் .அரவிந்தன் ஒழுங்கமைப்பில் கைத்தொழில் சேவைகள் பணியகத்தின் ஆலோசகர் தனுஷ்க பண்டார தலைமையில் மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க மண்டபத்தில் (04)  செவ்வாய்கிழமை நடைபெற்றது   .

இந்த ஒருநாள் கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்ட அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்., உதவி திட்ட  பணிப்பாளர்கள் மற்றும் கைத்தொழில் சேவைகள் பணியக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்