மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் மாபெரும் புத்தாண்டு கொண்டாட்டம் நாளை.

(சசி துறையூர்) மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கரிட்டாஸ் எகெட், கலாசார அதிகாரசபை மற்றும் மண்முனை மேற்கு பிரதேச  கிராம அமைப்புக்களும் இணைந்து சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் மாபெரும் பாரம்பரிய கலாச்சார விளையாட்டுப்போட்டியும் உணவுச்சந்தையும் நாளை.
வியாழக்கிழமை (20.04.2017) மு.ப 09.30 மணிக்கு பாவற்கொடிச்சேனை பொது விளையாட்டுத்திடலில் நடைபெறவுள்ளது.

 இவ் பாரம்பரிய  சித்திரை கொண்டாட்டத்தில் இன ஜக்கியத்தை வலுப்படுத்தும் முகமாக பதுளை மாவட்டத்தில் இருந்து ஜம்பது சிங்கள  இளைஞர் யுவதிகள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.