தந்தை செல்வா நினைவு தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

தமிழரசுக்கட்சியின் நிறுவுனர் அமரர் தந்தை செல்வாவின் 40வது நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 09.30மணியளவில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுதாவளை கலாசார மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

தமிழரசுக்கட்சியின் பட்டிருப்புக்கிளையின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா,யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டவுடன் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் ஆசியுரையினை சிவஸ்ரீ சு.விநாயகமூர்த்தி குருக்ள் வழங்கியதுடன் தலைமையுரையை பா.அரியநேத்திரனும் அறிமுகவுரையினை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் நிகழ்த்தினார்.

இதன்போது ஜெனீவா தீர்மானமும் ஈழத்தமிழர் அரசியலும் என்னும் தலைப்பில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றியதுடன் தந்தை செல்வா என்னும் தலைப்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவைசேனாதிராஜா உரையாற்றியதுடன் சிறப்புரையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் நிகழ்த்தினார்.