உயிர்த்த ஞாயிறு பாஸ்கா பண்டிகை விசேட திருப்பலி

(லியோன்)

உயிர்த்த ஞாயிறு பாஸ்கா பண்டிகை விசேட திருப்பலி  ஆராதனைகள்  மட்டக்களப்பு மாவட்ட உள்ள அனைத்து தேவாலயங்களிலும் டைபெற்றது.


உயிர்த்த ஞாயிறு பாஸ்கா பண்டிகையை  சிறப்பிக்கும் விசேட திருப்பலி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் மட்டக்களப்பு மரியாள் பேராலய பங்கு தந்தை எ .தேவதாசன் , உதவி பங்குதந்தை ஆகியோர் இணைந்து பாஸ்கா உயிர்த்த ஞாயிறு விசேட திருப்பலியை   மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஒப்புகொடுத்தனர் .

இந்த திருப்பலியின் போது நாட்டில் நிரந்தர சமாதானத்திற்கும் , சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் விடுதலைக்காகவும்  வேண்டியும்  நாட்டு மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ விசேட பிரார்த்தனைகள் ஆயரினால் நடாத்தப்பட்டது.


சிறைச்சாலையில் ஒப்புகொடுக்கப்பட்ட திருப்பலியில் மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் .யு ,எச் .அக்பர் , சிறைச்சாலை பிரதான ஜெயிலர் பிரபாகரன் , சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்களான பி .சுசிதரன் .எல் .ஜெயசுதாகரன் .பி. ஜி . டேவிட் சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,  மற்றும் தண்டனை கைதிகள் கலந்துகொண்டனர்.