(லியோன்)
ஆயித்தியமலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய பங்குனி
உத்திர வருடாந்த மகோற்சவம் விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
வரலாற்று
சிறப்புமிக்க ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய
பங்குனி உத்திர வருடாந்த மகோற்சவம் விஞ்ஞாபனம் 31.03.2017 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாக
ஆரம்பமானது.
ஆலய கொடியேற்ற நிகழ்வினை முன்னிட்டு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இ
.அரியரெத்தினம் தலைமையில் விநாயர்
வழிபாடுகளுடன் உற்சவகால கிரியைகள் ஆரம்பமானதுடன் விசேட யாக பூஜை மற்றும் அபிசேக
பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று கொடிச்சீலைக்கு பூஜைகள் நடைபெற்றது.
பூசையினை தொடர்ந்து கொடிச்சீலை உள்வீதியுலா கொண்டுவரப்பட்டு தம்த்தடியில்
விசேட பூஜைகளுடன் வேத, நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசகளுடன் கொடியேற்றம் சிறப்பாக
நடைபெற்றது.
கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசேக மற்றும் தீபாராதனைகள்
நடைபெற்றன.
வருடாந்த பங்குனி உத்திர மகோற்சவத்தின்
எதிர் வரும் 09 ஆம்
திகதி இடம்பெறவுள்ள தீர்த்தோற்சவத்துடன் வருடாந்த பங்குனி உத்திர மகோற்சவம்
விஞ்ஞாபனம் நிறைவுபெறவுள்ளது .