(லியோன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி போன்னிங்கிடன்
பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி இன்று பிற்பகல் அதிபர் திருமதி .ஜி எஸ் .லூக்கா
தலைமையில் நடைபெற்றது
ஆரம்ப நிகழ்வாக அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து சிறார்களினால்
அழைத்து வரப்பட்டன,இதனை தொடர்ந்து பாடசாலை
கொடி மற்று தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு, சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள்
ஆரம்பமானது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி .தவராஜா
மற்றும் அவரது பாரியார் திருமதி தவராஜா கலந்துகொண்டதுடன் இந்நிகழ்வில் விருந்தினர்களாக மட்டக்களப்பு
மாவட்ட முன்பிள்ளப்பருவ அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் வி முரளிதரன் , கல்லடி
விநாயகர் வித்தியாலய அதிபர் இ .தியாகலிங்கம் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள்
.பெற்றோர்கள் கலந்துகொண்டனர்
இடம்பெற்ற விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் சிறார்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகள்
இடம்பெற்றதோடு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும், பரிசில்கள்
வழங்கி வைக்கப்பட்டது .