மண்முனை வடக்கு ஸ்ரீ ராஜகணபதி ஆலய கும்பாபிசேக தினத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் (வீடியோ இணைப்பு)

(லியோன்)

மண்முனை வடக்கு ஸ்ரீ ராஜகணபதி ஆலயத்தின் கும்பாபிசேக தினத்தை  முன்னிட்டு சங்காபிஷேக பூஜைகள்  நடைபெற்றது.


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஸ்ரீ  ராஜகணபதி  ஆலய கும்பாபிசேக தினத்தை  முன்னிட்டு (01) சனிக்கிழமை விசேட யாக பூஜைகள் நடைபெற்று 108 சங்காபிஷேக விசேட பூஜைகள் நடைபெற்றது

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ லவகுமார் குருக்கள் தலைமையில் விசேட விநாயகர் பூஜை வழிபாடுகளுடன் பூஜைகள் ஆரம்பமானது

பூஜையினை தொடர்ந்து பிரதான கும்பம் மற்றும் பரிபால மூர்த்திகளின் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு மூலமூர்த்தியாக விநாயகருக்கு அபிசேகம் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து விநாயகருக்கு  108 சங்காபிஷேக செய்யப்பட்டு விசேட அபிசேம், தீபாராதனைகள்   நடைபெற்றது.

நடைபெற்ற சங்காபிசேக விசேட பூஜை நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே .குணநாதன் , பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ் .சதிஸ் குமார் உட்பட  பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர் .