மட்டக்களப்பு மட்டிக்கழி அருள்மிகு ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மட்டிக்கழி அருள்மிகு ஸ்ரீ திரௌபதாதேவி ஆலயத்தின் பங்குனி உத்தர தீமிதிப்பு உற்சவம் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.
குpழக்கு மாகாணத்தில் மிகவும் பழமையான திரௌபதாதேவி ஆலயங்களுல் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயம் தமிழர்களின் பாரம்பரிய பண்பாடுகளுடன் பூஜை வழிபாடுகளை நடாத்திவருகின்றது.

குடந்த 07ஆம் திகதி ஆரம்பமான ஆலயத்தின் பங்குனி உத்தர உற்சவமானது சிறப்பான முறையில் நடைபெற்றுவந்தது.

இந்த உற்சவத்தில் கலியாணக்கால் வெட்டும் உற்சவம்,வனவாசம் உற்சவம், தவநிலை நிகழ்வு என்பன நடைபெற்றுவந்த நிலையில் நேற்று இறுதி உற்சவமான தீமதிப்பு உற்சவம் நடைபெற்றது.

ஆலய பூசகர் நா.சிவபாலன் தலைமையில் நடைபெற்ற இந்த உற்சவத்தில் நேற்று மாலை மட்டக்களப்பு வாவியில் மஞ்சல் குளிக்கும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து ஆலய முன்றிலில் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்ற.

இந்த உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான பக்த அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.