எட்டாவது யொவுன் புரய பூமிக்கு பிரதமர் விஜயம் .


எட்டாவது யொவுன் புரய பூமிக்கு பிரதமர் விஜயம் .

கெளரவ பிரதமரின் தேசிய கொள்கை   மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சின் சிந்தனை வழிகாட்டலின் கீழ் செயற்படுகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் எட்டாவது தடைவையாக  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற பாரிய வேலைத்திட்டம் யொவுன் புரய 2017.


இந்த நிகழ்வில் இன்று மாலை மிக முக்கியமான தருணமாக கெளரவ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விஜயம் அமையவுள்ளது. யொவுன் புரய பூமிக்கு விஜயம்செய்து இளைஞர்களோடு சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.


எதிர் காலம் உதயமாகிவிட்டது எனும் கருப்பொருளில் நடைபெறும் இந்த வேலைத்திட்டத்தில் விளையாட்டு பொருளாதார, கலை கலாச்சார , தொழிற்பயிற்சி வேலைத்திட்டங்கள் போட்டி நிகழ்வுகளாகவும் கருத்தரங்குகளாகவும் கண்காட்சியாகவும் இடம்பெறவுள்ளது.

இனமத மொழி பேதமின்றி ஆறாயிரம் இளைஞர்யுவதிகள் பங்குபற்றும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.