காணாமல் போன பிள்ளையை தேடும் தாயின் குரல் இறுவெட்டு (வீடியோ இணைப்பு )

(லியோன்)

காணாமல் போனவர்களுக்காய் காத்திருக்கும் உறவுகளின் கண்ணீர் குரல் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு (30)  வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது .
 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “ ராசாத்தியின் துயரங்கள் “  எனும் ஒரு தாயின்  கண்ணீர் குரலை   காணாமல் போனவர்களுக்காய் காத்திருக்கும் உறவுகளின் கண்ணீர் குரலாக இறுவெட்டு வடிவில் வெளியீடப்படும்  நிகழ்வு கலாநிதி எஸ் . யோகராஜா தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாநகர ஆணையாளரும் “ராசாத்தியின் துயரங்கள்”  இறுவெட்டின் பாடலாசிரியருமான  ராசாத்தி வி.தவராஜாவின் உருவாக்கத்தில் காணாமல் போனவர்களின் உறவுகளில் காணமல் தனது பிள்ளையை தேடும் தாய்  ராசாத்தியின் துயரங்களை பாடல் வடிவில்  பாடகர்களான வி .பத்மஸ்ரீ , செல்வி . நீரஜா செல்வராஜா ஆகியோரினால் பாடப்பட்டு  இறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ளது .


இந்த வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியா பேராசிரியர் எஸ் .மௌனகுரு , கௌரவ  விருந்தினராக பிராந்திய அணித்தலைவர் எம் .யோகேஸ்வரன் , சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் எம் .கணேசராஜா , மற்றும் இலக்கிய வாதிகள் , எழுத்தாளர்கள் . கலைஞர்கள் .பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , மாநகர சபை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் கலந்துகொண்டனர்