(லியோன்)
காணாமல் போனவர்களுக்காய் காத்திருக்கும் உறவுகளின்
கண்ணீர் குரல் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு (30) வியாழக்கிழமை
மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது .
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “ ராசாத்தியின்
துயரங்கள் “ எனும் ஒரு தாயின் கண்ணீர் குரலை காணாமல் போனவர்களுக்காய் காத்திருக்கும்
உறவுகளின் கண்ணீர் குரலாக இறுவெட்டு வடிவில் வெளியீடப்படும் நிகழ்வு கலாநிதி எஸ் . யோகராஜா தலைமையில்
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாநகர ஆணையாளரும் “ராசாத்தியின்
துயரங்கள்” இறுவெட்டின் பாடலாசிரியருமான ராசாத்தி வி.தவராஜாவின் உருவாக்கத்தில் காணாமல்
போனவர்களின் உறவுகளில் காணமல் தனது பிள்ளையை தேடும் தாய் ராசாத்தியின் துயரங்களை பாடல் வடிவில் பாடகர்களான வி .பத்மஸ்ரீ , செல்வி . நீரஜா
செல்வராஜா ஆகியோரினால் பாடப்பட்டு இறுவெட்டாக வெளியிடப்பட்டுள்ளது .
இந்த வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியா
பேராசிரியர் எஸ் .மௌனகுரு , கௌரவ
விருந்தினராக பிராந்திய அணித்தலைவர் எம் .யோகேஸ்வரன் , சிறப்பு அதிதியாக
மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவர் எம் .கணேசராஜா , மற்றும் இலக்கிய வாதிகள் ,
எழுத்தாளர்கள் . கலைஞர்கள் .பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் , மாநகர சபை
உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் கலந்துகொண்டனர்