மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நாளை திங்கட்கிழமை கவன ஈர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடாத்தவுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 20நாளாக காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகினறனர்.
இந்த நிலையில் தமது நிலைமைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் பாராமுகமாக இருப்பதாக பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எதிர்காலத்தில் தாங்கள் போராட்ட வடிவத்தினை மாற்றவுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தி நாளை காலை காந்தி பூங்கா முன்பாக இருந்து கவன ஈர்ப்பு ஊர்வலம் ஒன்றை அமைதியான முறையில் மேற்கொள்ளளவுள்ளதாகவும் பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கடந்த 20நாளாக காந்தி பூங்கா முன்பாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகினறனர்.
இந்த நிலையில் தமது நிலைமைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் பாராமுகமாக இருப்பதாக பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எதிர்காலத்தில் தாங்கள் போராட்ட வடிவத்தினை மாற்றவுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது நியாயமான கோரிக்கையினை வலியுறுத்தி நாளை காலை காந்தி பூங்கா முன்பாக இருந்து கவன ஈர்ப்பு ஊர்வலம் ஒன்றை அமைதியான முறையில் மேற்கொள்ளளவுள்ளதாகவும் பட்டதாரிகள் சங்க தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.