ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு புதிய நிருவாகிகள் தெரிவு.


(சசி துறையூர்) ஏறாவூர் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் 12.03.2017 ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி கே.அழகுராஜ தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஏறாவூர் பற்று  பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்திற்கு 2017ம் வருடத்திற்கான  தலைவராக செல்வன் எஸ்.நிலக்சன் தெரிவு செய்யப்பட செயலாளராக பதவி வழியாக கே.அழகுராஜா  பிரதேச இளைஞர் சேவை அதிகாரி நியமிக்கப்பட்டார். பொருளாளராக செல்வன் க. நிரோசன்,  உப செயலாளராக செல்வன் திவாகர் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தில்  பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், பிரதம அதிதியாகவும்  ஏறாவூர் பற்று பிரதேச  செயலாளர் உ.உதயசிறிதர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி நிசாந்தி அருள்மொழி, இளைஞர் பாராளுமன்ற கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் அமைச்சர் ம.சுரேஸ்காந்தன்,  ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.