17வது நாளாகவும் தொடரும் மட்டக்களப்ப மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் -ஐ.தே.க.அமைப்பாளரும் சந்திப்பு

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் சத்தியாக்கிரக போராட்டம் 17வது தினமாகவும் இன்று வியாழக்கிழமையும் தொடர்ந்தது.

பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்குவதற்கு மத்திய மாகாண அரசுகள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் 17வது தினமாகவும் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாக தபால்,தபால் சேவைகள் அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்பு செயலாளரும் காத்தான்குடி பிரதேச ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான எச்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.

இன்று பிற்பகல் காந்தி பூங்காவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை சந்தித்து பிரதமரின் இணைப்புச்செயலாளரினால் வழங்கப்பட்டுள்ள கடித்தினையும் பட்டதாரிகளிடம் ஒப்படைத்தார்.

இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ரி.லிங்கநாதன் உட்பட கட்சி முக்கிஸ்தர்களும் கலந்துகொண்டனர்.