அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

 (லியோன்)

ஆசிரியர் பயிற்சி கற்கை நெறியினை நிறைவு செய்த அரசினர் ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு (09)  மட்டக்களப்பில் நடைபெற்றது
.

மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில்  2016 ஆம் ஆண்டுக்கான   ஆசிரியர் பயிற்சி நெறியினை நிறைவு செய்த 39ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் ,விருதுகளும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர்  கலாசாலையின் அதிபர் எ.எஸ் .யோகராஜா தலைமையில் கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது .


ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்குமாகாண கல்வி அமைச்சர் எம் .எஸ் . தண்டாயுதபாணி கலந்துகொண்டு ஆசிரியர் மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார் .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட பிரதி பணிப்பாளர் எ டி .கமலநாதன் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் ஜே . ஜெயரூபன் , கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்பணி நவரட்ணம், வணக்கத்துக்குரிய  ஸ்ரீமத்சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகள் கல்விப்பணிப்பாளர் பொன் செல்வநாயகம்,மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள் , பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் , ஆசிரியர்களின் குகுடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர் .