(லியோன்)
ஆசிரியர் பயிற்சி கற்கை நெறியினை நிறைவு செய்த அரசினர் ஆசிரியர்
கலாசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு (09) மட்டக்களப்பில்
நடைபெற்றது
.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் 2016 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பயிற்சி நெறியினை நிறைவு செய்த 39ஆசிரியர்களுக்கு
சான்றிதழ்களும் ,விருதுகளும் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் எ.எஸ் .யோகராஜா தலைமையில்
கலாசாலை மண்டபத்தில் நடைபெற்றது .
ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக
கிழக்குமாகாண கல்வி அமைச்சர் எம் .எஸ் . தண்டாயுதபாணி கலந்துகொண்டு ஆசிரியர்
மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார் .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட பிரதி
பணிப்பாளர் எ டி .கமலநாதன் , மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர் ஜே .
ஜெயரூபன் , கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்பணி நவரட்ணம், வணக்கத்துக்குரிய
ஸ்ரீமத்சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் கிழக்கு மாகாண பாலர்
பாடசாலைகள் கல்விப்பணிப்பாளர் பொன் செல்வநாயகம்,மற்றும் கல்வி திணைக்கள அதிகாரிகள்
, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் , ஆசிரியர்களின் குகுடும்ப உறுப்பினர்கள் என பலர்
கலந்து சிறப்பித்தனர் .