மட்டக்களப்பில் 153வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிப்பு

153வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.இதன் கிழக்கு மாகாண பிரதான நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு சிரேஸ்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் நடைபெற்றது.

கிழக்கு பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் சுமித் எதிரிசிங்க தலைமையில் சிரேஸ்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் வீரர்கள் நினைவுக்கல் அருகில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள்,மதத்தலைவர்கள்,சிவில் பாதுகாப்பு குழுவினர்,உயிரிழந்த பொலிஸாரின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நினைவுக்கல் அருகில் மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பொலிஸ் மரியாதையும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பொலிஸ் மா அதிபரின் செய்தியும் கிழக்கு மாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபரினால் வாசிக்கப்பட்டது.