கோறளைப்பற்று வாழைச்சேனையில் பிரதேச இளைஞர் அபிவிருத்தி ஆலோசனை செயற்குழு அங்குரார்ப்பனம்.

(சசி துறையூர்) தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை   அமைச்சு மற்றும்
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் வழிகாட்டலின் கீழ்
 கோறளைப்பற்று     வாழைச்சேனை  பிரதேச செயலகப்பிரிவில் அரச உத்தியோகத்தர்களுக்கு இளைஞர் கழக நடவடிக்கை மற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான தெளிவூட்டலும் ஆலோசனை செயற்குழு அமைத்தலும் தொடர்பான கூட்டம் பிரதேச செயலாளர் அவர்களின் பங்கு பற்றலுடன் இளைஞர் சேவை அதிகாரி எஸ்.சபியதாஸ் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில்  பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் உட்பட  கோறளைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு கிராம மட்டத்திலிருந்து இளைஞர்களின் செயற்பாடுகளையும் பங்குபற்றல்களையும் அதிகரிப்பதற்காக செயற்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.

  இதில் தலைவராக பிரதேச செயலாளர் திரு வ.வாசுதேவன் தெரிவு செய்யபட்டார் அதனைத் தொடர்ந்து உப தலைவர் திருமதி க.சங்கீதா தெரிவு செய்யப்பட்டார் செயற்குழு அங்கத்தவர்களாக திரு.அழகுராசா, திரு.க.சுதன் திருமதி.k.சிவானந்தராஜா, திரு .k.கிருஸ்ணகாந், திரு .கோ.விஜயகண்ணன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.