மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வினை முன்னிட்டு எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு (02) இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.


ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வினை முன்னிட்டு ( 01) புதன்கிழமை யாழ் உரும்பிராய் சிவ தர்மாசாஸ்தா ஆலய குரு ஐய்யப்ப குரு சுவாமி பிரம்மஸ்ரீ தாணு வாசுதேவ சிவாச்சாரியார் தலைமையில் கிரியைகளை ஆரம்பமாகி  இன்றைய தினம் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வுகள் ஆலய பிரதம குரு  சிவஸ்ரீ உத்தம ஜெயதீஸ்வர சர்மா குருக்களின் தலைமையில்  நடைபெற்றது .

இன்று காலை இடம்பெற்ற சிறப்பு தீபாராதனை பூஜை வழிபாடுகளை தொடர்ந்து   காலை 08.00 மணி  முதல் மாலை 04.00 மணி வரை எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு  நடைபெற்றது .

இந்நிகழ்வில்  மாவட்ட செயலக அலுவலக உத்தியோகத்தர்கள்  கலந்துகொண்டு  நிகழ்வினை சிறப்பித்தனர் .

நாளை வெள்ளிக்கிழமை (03) காலை புண்ணிய வாசனம், யாகபூசை ஹோமம், மஹா பூர்ணாகுதி, அந்தர் பலி, பகிர் பலி, யாக தீப ஆராதனை புஸ்பாஞ்சலி, வேத ஜ.தோத்திர திருமுறை பாராயணம், கீத வாத்திய சமர்ப்பணம், யாத்திர தானம், மங்கல வாத்திய சகிதமாக சுபவேளையில் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறும்.