புனர்வாழ்வு வாழ்வு அமைச்சின் பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

 (லியோன்)

புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள் குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் அமைச்சர்  சுவாமிநாதனின் வழிகாட்டலின் கீழ்  புனர்வாழ்வு வாழ்வு அமைச்சின் கிழக்கு மாகாண அலுவலக ஏற்பாட்டில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களின் பிள்ளைகளுக்கு பாடாசாலை கற்றல் உபகரணங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் கிழக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சின்  மட்டக்களப்பு மாவட்ட அலுவலக அதிகாரி மேஜர் அமரசிங்க தலைமையில் நடைபெற்றது .. 

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண கஜபா பத்தாவது படை அணி பிரிவு சிரேஷ்ட அதிகாரி மேஜர் டி .பி..எஸ் .ஐ . டயஸ் ஆர் .எஸ் .பி கலந்துகொண்டு பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார் .

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சின்  மட்டக்களப்பு மாவட்ட அலுவலக அதிகாரிகள் , இராணுவ அதிகாரிகள் மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள்  ,அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ,மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்