(சசி துறையூர்) கோரளைப்பற்று வாகரை, பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் வாகரைப் பிரதேசத்துக்கான போதைப்பொருள் ஒழிப்பு இளைஞர் வலைப்பிண்ணல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வாகரை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி முகம்மது பசில் தலைமையில் மட்/பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலயத்தில் கடந்த 28,29/01/2017 ஆகிய இருதினங்களில் நடைபெற்ற இந் நிகழ்வில் சுமார் 40 மேற்பட்ட இளைஞர்கள்பங்கு பற்றியிருந்தனர்.
பிரதேச இளைஞர்களை ஒன்றினைத்து அவர்கள் மூலம் போதைப்பொருள் பாவனைஅற்ற இளைஞர் சமூதாயத்தை உருவாக்குவதே இந்த வலைப்பிண்ணலில் நோக்கமாகும்.
இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.