மட்டக்களப்பில் பொங்கல் விழா –கலாசார பவனியுடன் ஆரம்பம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழா இன்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன்,திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.துரைரெட்னசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராஜா ஆகியோர் இந்த நிகழவ்pல் கலந்துகொண்டுள்ளனர்.

இதன்போது கல்லடி பாலத்தில் இருந்து மாபெரும் ஊர்வலம் பொங்கல் நிகழ்வு நடைபறெ;ற அரசடி தேவநாயகம் மண்டபம் வரையில் நடைபெற்றது.

தமிழர்களின் கலாசார இன்னியம் இசையுடன் இந்த கலாசார பவனி நடைபெற்றதுடன் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.