(சசி துறையூர்) கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் வழி காட்டலில், வாகனேரி காமாட்சி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை இளைஞர் கழகத்தின் வளநிலையத்தில் கழகத்தின் தலைவர் K.பார்த்தீபன் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இவ் நிகழ்விற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்னபிள்ளை, பிரதேச இளைஞர் சேவை அலுவலர் த. விந்தியன், தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் மற்றும் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத் தலைவர் கோ.தினேந்திரன், உபதலைவர் G.கமல்ராஜ் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் பாரம்பரிய முறையில் பொங்கல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.