நான்காவது இளைஞர் பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு ஆசனம்.

(சசி துறையூர்) இலங்கையின் நான்காவது இளைஞர் பாராளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஜந்தாவது பிரதிநிதியாக  மட்/ சிசிலியா பெண்கள் கல்லூரியின் வர்த்தக பிரிவு மாணவி செல்வி சய்னுஜா இன்பநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நான்காவது இளைஞர் பாராளுமன்றத்துக்கான ஆசன ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவ தலைவர்களுக்காக மாகாண மட்டத்தில் 10 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்துக்கான  பாடசாலை மாணவ தலைவர்களுக்கான பிரதிநிதித்துவமாக இந்த மாணவி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் போனஸ் ஆசனமென்று பெறப்பட்டு மாவட்டத்துக்கான ஆசனம் நான்காக காணப்பட்டவேளை மேலதிக ஒரு ஆசனம் கிடைத்ததன் மூலம் மாவட்டத்தின் இளைஞர்பாராளுமன்ற பிரதிநிதித்துவ எண்ணிக்கை ஜந்தாக உயர்ந்துள்ளது.

தெரிவு செய்யப்பட்ட செல்வி சய்னுஜா, மட்டக்களப்பு மாமாங்கத்தைச்சேர்ந்த இன்பநாதன் சேதீஸ்வரி தம்பதிகளின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.