மட்டக்களப்பு மாவட்ட போதகர்கள் ஒன்றியத்தின் அலுவலகம் திறந்துவைப்பு

மட்டக்களப்பு மாவட்ட போதகர்கள் ஒன்றியத்தின் அலுவலகம் இன்று மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.நிலையத்தில் இந்த அலுவலகம் இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட போதகர்கள் ஒன்றியத்தின் தலைவர் ரி.தெய்வேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ சபைகளின் போதகர்கள் கலந்துகொண்டனர்.

கிறிஸ்தவசமயத்தின் வளர்ச்சி உட்பட பல்வேறு சமூக செயற்பாடுகளைக்கொண்டதாக இந்த அலுவலகம் இயங்கவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளிளையும் ஒன்றிணைத்ததாக இந்த மட்டக்களப்பு மாவட்ட போதகர்கள் ஒன்றியம் உருவாக்கப்பட்டு கடந்த 15வருடகாலமாக செயற்பட்டுவருகின்றது.