கிரானில் பாதுகாப்பற்ற பாலத்தினால் பயணித்தவர் வீழ்ந்து மரணம்

மட்டக்களப்பு,வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிரான் பகுதியில் பாதுகாப்பற்ற பாலத்தில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பாலத்தின் ஊடாக துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், கிரானில் இருந்து உறவினரின் வீட்டிற்கு சென்று கோராவளியில் உள்ள தனது வீட்டை நோக்கி செல்லும் போது கிரான் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற சிறு பாலத்தின் அருகில் தவறி இரண்டு மீற்றர் ஆழத்தில் விழுந்ததில் கருங்கல்லில் அடிபட்டதில் இந்த இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் கிரான் கோராவளியை சேர்ந்த கணபதிப்பிள்ளை செல்லத்துரை(வயது 47) என குறிப்பிடப்பட்டுள்ளது.