தந்தையை காப்பாற்றச்சென்றவர் விபத்தில் சிக்கி படுகாயம் -வெல்லாவெளியில் சம்பவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடி வட்டையில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

விளாந்தோட்டம் அலியார்வட்டையை சேர்ந்த தந்தைக்கும் மகனுக்கும் நடந்த குடும் தகராறு காரணமாக தந்தை நஞ்சு அருந்திவிட்டார் .தந்தையை காப்பாற்ற வைத்தியசாலைக்கு ஓட்டோவில் உறவினர்களுடன் ஏற்றி அனுப்பிவிட்டு மகன் பின்னால் சென்றுள்ளார். அதன் போது பாலையடிவட்டை பாடசாலைமுன்னால் எதிரே வந்த ஓட்டோவில் மோட்டார்சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற 28 வயதுடைய சுந்தரலிங்கம் சுகந்தன் காயமுற்று களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாதாக பிரதேச தகவல்கள் தெரிவித்தன.

இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.