(லியோன்)
பேண்தகு பாடசாலை
அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் போசாக்கு , சுகாதாரம் ,சிறுவர் உரிமைகள்
,பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு
நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதற்கு அமைய கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக வலயமட்டத்தில்
தெரிவு செய்யப்பட பாடசாலைகளில்
இந்த நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது .
இதன்கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் கே
.பாஸ்கரன் பணிப்புரையின் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா
வித்தியாலயத்தில் மாணவர்களின் போசாக்கு , சுகாதாரம் ,சிறுவர் உரிமைகள்
,பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின்
கீழ் சிரமதான பணிகளும் ,மரக்கன்று நடுகை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய கல்வி அபிவிருத்தி
(அலுவலகம்) திருமதி .கங்கேஸ்வரன் , மட்டக்களப்பு கல்வி வலய நிருவாக பிரதி கல்விப்பணிப்பாளர்
பி . கோவிந்தராஜா,பாடசாலை பிரதி அதிபர் பகிரதன் ஆசிரியர்கள் , மாணவர்கள்
, கிராம சேவை உத்தியோகத்தர் , சமுர்த்தி உத்தியோகத்தர் , பொருளாதார
அபிவிருத்தி உத்தியோகத்தர் , பொதுசுகாதார பரிசோதகர் , பழைய மாணவர்கள் ,
பெற்றோர்கள் , என பலர் கலந்து கொண்டனர் .