மெதடிஸ்த மத்திய கல்லூரி 2017 ஆம் ஆண்டு கால்கோள் விழா

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய  கல்லூரிக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களை  இணைத்துக்கொள்ளும் கால்கோள் விழா மிக சிறப்பாக (19)வியாழக்கிழமை நடைபெற்றது .


மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி 2017 ஆம் ஆண்டு முதலாம் தர மாணவர்களின் பெற்றோர்  அபிவிருத்தி குழு ஏற்பாட்டில் கல்லூரி பழைய மாணவர்களின் பங்களிப்புடன்  கல்லூரி அதிபர் விமல்ராஜ்  தலைமையில்  நடைபெற்ற கால்கோள் விழா நிகழ்வில்   பிரதம விருந்தினராக கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே .எஸ் .டி. எம் .அசங்க அபேவர்த்தன கலந்துகொண்டார் .

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாணவர்களினால் வரவேற்கப்பட்டனர் இதனை தொடர்ந்து  தரம் 02 மாணவர்கள்  முதலாம் தரத்திற்கு  வருகை தந்த மாணவர்களை   மாலை அணிவித்து வரவேற்றதுடன் தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் மாணவர்களின்  வரவேற்பு கலை நிகழ்வுகளும் நடைபெற்றது


இந்நிகழ்வில்  மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர்  கே .பாஸ்கரன் . மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர்  எ .சுகுமாரன் கல்லூரி அபிவிருத்தி குழு  உறுப்பினர்கள் ,  ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் ,பழைய மாணவர்கள் என பலர்  கலந்துகொண்டனர் .