(சசி துறையூர்)
கல்குடா தேர்தல் தொகுதியில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் போட்டியிட்டு அதிகப்படியான வாக்குகளைப் பெற்ற J.M.திபாஸ் மாவட்டத்தின் நான்காவது பிரதிநிதியாக இளைஞர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். என மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஜனாப் MLMN.நைறூஸ் தெரிவித்தார்.
நேற்று நடந்து முடிந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் மூன்று தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில். முஸ்லிம் இளைஞர்களுக்காக போனஸ் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.