சனிமவுன்ட் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு

 (லியோன்)

மட்டக்களப்பு  ஜெயந்திபுரம் சனிமவுன்ட் விளையாட்டுக்கழகத்தின்  வருடாந்த ஒளிவிழா நிகழ்வு மட்டக்களப்பு ஜெயந்திபுரத்தில் நடைபெற்றது.


மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட  ஜெயந்திபுரம்  சனிமவுன்ட் விளையாட்டுக்கழகத்தின்  வருடாந்த ஒளிவிழா  நிகழ்வு  கழகத்தின் தலைவர் கே .சுரேஸ்குமார் தலைமையில்  18.12.2016 ஞாயிற்றுக்கிழமை  மாலை மட்டக்களப்பு ஜெயந்திபுரம் பெற்றோலிய கூட்டுத்தாபன விடுதி மைதானத்தில் நடைபெற்றது .

நடைபெற்ற வருடாந்த ஒளிவிழா  நிகழ்வில் விளையாட்டுக்கழக உறுப்பினர்களின் கலை நிகழ்வுகளும் , மட்டக்களப்பு பாலமீன்மடு குழந்தை இயேசு ஆலய பங்கு மாணவர்களின் ஒளிவிழா கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.   

இதனை தொடர்ந்து ஒளிவிழா நிகழ்வுகளில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு சனிமவுன்ட் விளையாட்டுக்கழகத்தினால் பரிசில்களும் ,பாடசாலை கற்றல் உபகரணங்களும்   வழங்கி வைக்கப்பட்டது .

ஒளிவிழா  நிகழ்வில் அதிதிகளாக  மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா , பெற்றோலிய கூட்டுத்தாபன அத்தியட்சகர் எம் ,குகவரதன் , இருதயபுரம் திருஇருதயநாதர் ஆலய பங்கு தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் ,இருதயபுரம் குமாரத்தன் தேவஸ்தான பிரதம குருக்கள் ஜெகதிஸ்வர குருக்கள் , கிராம சேவை உத்தியோகத்தர் , திருமதி . சுகந்தினி ஜெகதர்சன் ,அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . பிரியதர்சினி அருள்ராஜ் , வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் திருமதி . பிரதீபா விவேகானந்தராஜா மற்றும் விளையாட்டுக்கழக  முன்னாள் நிருவாக சபை பிரதிநிதிகள் , விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் , ,மாணவர்கள் ,கிராம  மக்கள்  என  பலர் கலந்துகொண்டனர்