(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வினை சிறப்பிக்கும்
விசேட ஒளி விழா கொண்டாட்டங்கள் இடம்பெற்று
வருகின்றது .
இதற்கு அமைய மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் ஒளி விழா
நிகழ்வு பிரதேச செயலாளரும் , பிரதேச செயலக
நலன்புரி சங்க தலைவருமான வி .தவராஜா
தலைமையில் இன்று மட்டக்களப்பு
மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில்
நடைபெற்றது .
நடைபெற்ற ஒளி விழா நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின்
கரோல் கீதங்கள் , மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பிரதேச செயலக
நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான
பாடசாலை கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தன்னாமுனை பங்கு தந்தை அருட்பணி
ரமேஷ் கிறிஸ்டி மற்றும் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா , பிரதேச
செயலக கணக்காளர் பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள்
,கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,பாடசாலை மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்