தாய்மார்கள் மற்றும் சிறார்களுக்கான இசை வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

(லியோன்)

தாய்மார்கள் மற்றும் சிறார்களுக்கான  (தொலோஸ் மகே பாஹான)  இசை வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மட்டிக்களி சுகாதார பணிமனையில் இன்று நடைபெற்றது .


கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அதிகாரசபையுடன் மட்டக்களப்பு  சுகாதார  பிரிவு இணைந்து நடாத்திய தாய்மார்கள் மற்றும் சிறார்களுக்கான  (தொலோஸ் மகே பாஹான)  இசை வேலைத்திட்டம் சுகாதார வைத்திய அதிகாரி திருமதி . கீர்த்திகா  மதனழகன் ஏற்பாட்டில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் மட்டக்களப்பு மட்டிக்களி சுகாதார பணிமனையில் இன்று நடைபெற்றது .

இந்நிகழ்வில் மட்டக்களப்பின் பாரம்பரிய கலை கலாசார பாடல்களின் தொடர்பான எதிர்கால வேலைத்திட்டங்கள் இதனுடன் இணைந்ததாக தாலாட்டுப்பாடல்கள், சிறார்களின் பாடல்கள் தொடர்பாக கலந்துகொண்ட தாய்மார்களுக்கு தெளிவூட்டல்களும், கலந்துரையாடல்களும் இடம்பெற்றது .


இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை வடக்கு கிழக்கு கலாசார பணிப்பாளரும் மண்முனை வடக்கு பிரதேச கலாசார அதிகார சபை உபதலைவருமான எஸ் . எதிர்மன் சிங்கம் மற்றும் மண்முனை வடக்கு  பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திருமதி . சாலினி மதன்குமார் ,பிரதேச செயலக உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி . லோகநாதன் ஜீவராணி , ஆயிர்வேத அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .த .வேணுகா , சுகாதார குடும்பநல தாதிய உத்தியோகத்தர்கள் , தாய்மார்கள் உட்பட சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்