சத்திர சிகிச்சைக்கு உதவி இன்னும் உதவி வழங்க கொடையாளர்களிடம் கோரிக்கை.

 (சசி துறையூர் ) 

மட்டக்களப்பு திராய்மடுவை சேர்ந்த கணவன் இன்றி வாழும் திருமதி தர்ஷினி,   இவருக்கு மூன்று பிள்ளைகள் கணவர் பத்து வருடங்களின் முன்  காணமல் போயுள்ளார்.

கணவன் இல்லாத நிலையில் தர்ஷினி தனது முயற்சியால் சிறு சிறு வேலைகள் பார்த்து தனது பிள்ளைகளை பராமரித்து வந்துள்ளார்.

தர்ஷினியின் மூத்த மகன் குடும்ப பொருளாதார நிலை காரணமாக உயர் கல்வியை தொடரா முடியாமல் மேசன் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்திருக்கின்றார். வேலைத்தளத்தில் மாடியில் இருந்து விழுந்ததன் காரணமாக மண்டை ஓடு பாதிக்கப்பட்டுள்ளது.   சாத்திரசிகிச்சைக்காக ரூபா 200,000 தேவை என வைத்தியசாலையில் கூறப்பட்டு கடந்த நான்கு மாதமாக சத்திர சிகிச்சை செய்யப்படாமல் இருந்திருக்கின்றார்.

 எதிர்வரும் 20ம் திகதி சத்திர சிகிச்சை செய்ய தீர்மானித்துள்ளதால் அதற்க்காக விருட்சம் சமூக மேம்பாட்டு அமையம் ரூபா 25,000 இனை நேரில் சென்று வழங்கி வைத்தனர்.

மேலதிகமாக இன்னும் பண உதவி தேவைப்படுவதனால் உதவக்கூடிய நல்லுள்ளங்கள் இக்குடும்பத்துக்கு உதவுமாறு பணிவாக வேண்டப்படுகின்றனர்.