சின்ன உப்போடை லூர்து அன்னை பாலர் பாடசாலை சிறார்களின் ஒளிவிழா நிகழ்வுகள்

(லியோன்)

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட பாலார் பாடசாலை சிறார்களின் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .


இதற்கு அமைய மட்டக்களப்பு  சின்ன உப்போடை லூர்து  அன்னை பாலர் பாடசாலை சிறார்களின் ஒளிவிழா நிகழ்வுகள்  பாடசாலை அதிபர் அருட்சகோதரி மெடலின் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது .

இந்நிகழ்வில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வினை சிறப்பிக்கும்  வகையில்  ஆசிரியர்கள் ஒழுங்கமைப்பில் பெற்றார்களின் பங்களிப்புடன் சிறார்களின் கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா  நிகழ்வுகளும் சிறார்களுக்கான  பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது

இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்பணி எ . நவரெட்ணம் , மட்டக்களப்பு  புளியடிக்குடா செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை  யேசு சபை துறவி  அருட்பணி லோரன்ஸ் ,  மட்டக்களப்பு புனித திரேசா மகளிர் வித்தியாலய அதிபர் திருமதி . மாலதி பேரின்பநாதன் , பெரிய உப்போடை மரியாயின் பிரான்சிஸ்கன்  மறைபரப்பு கன்னியர்மட  அருட்சகோதரிகள் , பாடசாலை ஆசிரியர்கள் ,  பெற்றோர்கள் , பங்கு மக்கள்  என  பலர் கலந்துகொண்டனர் .