(லியோன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட பாலார் பாடசாலை சிறார்களின்
கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன .
இதற்கு அமைய மட்டக்களப்பு
சின்ன உப்போடை லூர்து அன்னை பாலர்
பாடசாலை சிறார்களின் ஒளிவிழா நிகழ்வுகள்
பாடசாலை அதிபர் அருட்சகோதரி மெடலின் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது .
இந்நிகழ்வில் கிறிஸ்து பிறப்பு நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில்
ஆசிரியர்கள் ஒழுங்கமைப்பில் பெற்றார்களின் பங்களிப்புடன் சிறார்களின்
கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா நிகழ்வுகளும்
சிறார்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும்
நடைபெற்றது
இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் அருட்பணி எ
. நவரெட்ணம் , மட்டக்களப்பு புளியடிக்குடா
செபஸ்தியார் ஆலய பங்கு தந்தை யேசு சபை
துறவி அருட்பணி லோரன்ஸ் , மட்டக்களப்பு புனித திரேசா மகளிர் வித்தியாலய
அதிபர் திருமதி . மாலதி பேரின்பநாதன் , பெரிய உப்போடை மரியாயின்
பிரான்சிஸ்கன் மறைபரப்பு கன்னியர்மட அருட்சகோதரிகள் , பாடசாலை ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , பங்கு மக்கள் என
பலர் கலந்துகொண்டனர் .