(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட புகைப்படம் பிடிப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி
பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது .
போட்டோ டெக்னிக்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட புகைப்பட பிடிப்பாளர்கள்
சங்கம் மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் ஒழுங்கமைப்பில் புகைப்பட கருவி இயக்கம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட புகைப்படபிடிப்பாளர்கள் , ஊடகவியலாளர்கள்
மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான
ஒருநாள் பயிற்சி பட்டறை போட்டோ டெக்னிக்கா நிறுவனத்தில் உரிமையாளர் ஹர்ச
மல்வண்ண தலைமையில் மட்டக்களப்பு YAMC
மண்டபத்தில் (13) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .
இந்த பயிற்சி பட்டறையில் புகைப்பட கருவினை எவ்வாறு இயக்குவது
அதன் தொழில்நுற்ப செயல்பாடுகள் , புகைப்படங்களின் தர நிருணய உத்திகள் ,
மற்றும் புகைப்படக்கருவிகளுக்கான இலவச பழுதுபார்த்தல் சேவைகள் போன்றவைகள் இடம்பெற்றன
இந்த நிகழ்வில் தொழில்நுற்ப
விரிவுரையாளராக போட்டோ டெக்னிக்கா நிறுவன
தொழில்நுற்ப பிரிவு உத்தியோகத்தர் டொமினிக் கலந்துகொண்டு தொழில்நுற்ப விரிவுரைகளை
வழங்கினார் .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி தவராஜா கலந்துகொண்டதுடன் மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழக அங்கத்தவர்கள்
,மாவட்ட புகைப்படபிடிப்பாளர்கள் சங்க
உறுப்பினர்கள் , ஊடகவியலாளர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் , போட்டோ டெக்னிக்கா
நிறுவன ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்