புகைப்பட பிடிப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட புகைப்படம் பிடிப்பாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது .


போட்டோ டெக்னிக்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு மாவட்ட புகைப்பட பிடிப்பாளர்கள் சங்கம் மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகம் ஒழுங்கமைப்பில்  புகைப்பட கருவி இயக்கம்  தொடர்பாக  மட்டக்களப்பு மாவட்ட  புகைப்படபிடிப்பாளர்கள் , ஊடகவியலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான  ஒருநாள் பயிற்சி பட்டறை போட்டோ டெக்னிக்கா நிறுவனத்தில் உரிமையாளர் ஹர்ச மல்வண்ண தலைமையில்  மட்டக்களப்பு YAMC மண்டபத்தில் (13) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

இந்த பயிற்சி பட்டறையில் புகைப்பட கருவினை எவ்வாறு இயக்குவது அதன்  தொழில்நுற்ப செயல்பாடுகள்   , புகைப்படங்களின் தர நிருணய உத்திகள் , மற்றும் புகைப்படக்கருவிகளுக்கான இலவச  பழுதுபார்த்தல் சேவைகள் போன்றவைகள் இடம்பெற்றன  

இந்த நிகழ்வில்  தொழில்நுற்ப விரிவுரையாளராக  போட்டோ டெக்னிக்கா நிறுவன தொழில்நுற்ப பிரிவு உத்தியோகத்தர் டொமினிக் கலந்துகொண்டு தொழில்நுற்ப விரிவுரைகளை வழங்கினார் .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்  வி தவராஜா கலந்துகொண்டதுடன்  மற்றும் மட்டக்களப்பு லயன்ஸ் கழக அங்கத்தவர்கள் ,மாவட்ட  புகைப்படபிடிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் , ஊடகவியலாளர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் , போட்டோ டெக்னிக்கா நிறுவன  ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர்