மார்பு புற்றுநோய் சிகிச்சைக்கு இலகுவான வழிமுறைகள் தொடர்பான கருத்தரங்கு

(லியோன்)

உலக மார்பு புற்றுநோய் மாதத்தை சிறப்பிக்கும் விசேட விழிப்புணர்வு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .


உலக மார்பு புற்றுநோய் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் விசேட விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு புற்றுநோய் சங்கம் மற்றும்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்று நோய் பிரிவு இணைந்து  மட்டக்களப்பு புற்றுநோய் சங்க தலைவர் தர்மரெட்ணம் தலைமையில் மட்டக்களப்பு அரசினர்  ஆசிரியர் கலாசாலை மண்டபத்தில் இன்று நடைபெற்றது

இன்று நடைபெற்ற  விழிப்புணர்வு கருத்தரங்கானது மார்பு புற்றுநோய் தொடர்பான தெளிவான விடயங்களை சமூகத்திற்கு செல்ல வேண்டும் என்ற வகையிலும் மார்பு புற்றுநோய் உள்ள நோயாளிகளை இனங்கண்டு நோயை குணப்படுத்துவதோடு உயிர் ஆபத்தில் இருந்து பாதுகாப்பதும்  , இலகுவான முறையில் சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான இலகு வழிமுறைகள் தொடர்பான தெளிவூட்டல்களாக  இந்த கருத்தரங்கு ஆசிரியர் கலாசாலை பயிலுனர் ஆசிரியர்களுக்காக   இடம்பெற்றது .

நடைபெற்ற கருத்தரங்கில் வளவாளராக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை பிரிவு அதிவிசேட  வைத்திய நிபுணர்  வைத்தியர் எ . இக்பால் கலந்துகொண்டு விரிவுரைகளை வழங்கினார் .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு புற்றுநோய் சங்க உறுப்பினர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் , மட்டக்களப்பு அரசினர்  ஆசிரியர் கலாசாலை அதிபர் ,ஆசிரியர்கள் , கலாசாலையில் பயிற்சி பெரும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் .