(லியோன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு ஒளிவிழா கொண்டாட்டங்கlள் இடம்பெற்று வருகின்றது.
இதற்கு அமைவாக மட்டக்களப்பு
கல்விவலயத்திற்குட்பட்ட
மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் ஒளிவிழா நிகழ்வுகள் இன்று அதிபர் திருமதி . என் .துரைராஜசிங்கம் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மறை மாவட்ட குருமுதல்வரும் , மட்டக்களப்பு மரியாள் பேராலய பங்குதந்தை எ தேவதாசன் ,
கோட்டமுனை மெதடிஸ்த ஆலய போதகர் எஸ் . சில்வஸ்டர் ரேரன்ஸ் ,
மட்டக்களப்பு தாண்டவன்வெளி காணிக்கை மாதா ஆலய வின்சன்ட் டி போல் சபை
உறுப்பினர் ஜே .எச் . ரட்ணராஜா ,பாடசாலை
அபிவிருத்தி குழு உறுப்பினர் நீலாகரன் மற்றும் பாடசாலை மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .
நிகழ்வில்
கிறிஸ்து பிறப்பை பிரதிபலிக்கு வகையில் மாணவர்களின்
ஒளிவிழா கலை நிகழ்வுகளும் கரோல் கீதங்களும் இடம்பெற்றது .
இதன் போது ஒளிவிழா நிகழ்வில் கலந்து கொண்ட பிரதம விருந்தினர்களின்
சிறப்பு ஒளிவிழா செய்திகளும் நத்தார் தாத்தாவின்
ஒளிவிழா கொண்டாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றது.