செட்டிபாளையத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் நிதியொதுக்கீட்டில் நினைவஞ்சலி மண்டபம்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலத்திற்குட்பட்ட செட்டிபாளையம் பொதுமயானத்தில் அமைக்கப்படவுள்ள அஞ்சலி மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் நிதியொதுக்கீட்டில் இந்த அஞ்சலி மண்டபம் கட்டப்படவுள்ளது.

இதற்காக நான்கு இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.கோபாலரட்னம் உட்பட கிராம முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.